ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

சேனை வேளாளர் 17ம் நூற்றாண்டு புலவர் சேனைத்தலைவர் வெள்ளாளர் தொடர்பு முதலியார் பட்டம்

ajasubramanian Sundaram Muthiah
சேனை வேளாளர் யார்?
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வீரட்டேசுரர் பாமாலை எழுதிய முத்துச்சாமி
புலவர் சேனை வேளாளர் என உள்ளது. இந்த சேனைவேளாளர் தான் இன்றைய
சேனைத்தலைவர்களா?
நூல்: தமிழ்ப் புலவர் வரலாற்றுக் களஞ்சியம்
//முத்துச்சாமிப் புலவர் - 3 (19-நூ)
ஊர்: இராயவேலூர்; சேனை வேளாளர்.
தந்தை: ஐயாச்சாமி முதலியார்.
நூல்: வீரட்டேசுரர் பாமாலை.
இந்நூல் 104 செய்யுட்களை உடையது. பக்கம் 122//
//: சேனை குலத்தார் பட்டயம் (1889).
இந்நூல் உரைநடையில் அமைந்தது. சேனைகுல வேளாளரைப் பற்றிய வரலாற்றுச்
செய்திகளைக் கூறுவது. பக்கம் 208//
இன்று சேனைத்தலைவர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 105ஆம் எண்ணில் உள்ளனர்.
105. சேனைத்தலைவர், சேனைக்குடியர், இலை வாணியர்

Rajasubramanian Sundaram Muthiah
மறைமலை அடிகள் தாய் சேனைத்தலைவர். தந்தை வேளாளர். மறைமலை அடிகள் தந்தை
காலத்திலேயே வேளாளர் சேனைத்தலைவருக்குள் கொண்டு கொடுத்தல் இருக்குதுன்னா
அப்ப பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை சேனைத்தலைவர் சேனை வேளாளர் என
கூறப்பட்டதாக கொள்ளலாம் அல்லவா?

முதலியார் பட்டமிருப்பதால் சேனைத்தலைவராக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
சேனைத்தலைவர்கள் போர்த் தளபதிகளாக இருந்தவர்கள்.
காய்கறி விவசாயம் செய்பவர்கள்.
முதலியார் பட்டமும் உண்டு.
வெற்றிலை உற்பத்தி செய்வதால் இலைவாணியர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இவர்கள் போர்க்குடியா? வேளாண்குடியா? வணிகக் குடியா? என்பது உறுதியாகத்
தெரியவில்லை.
என் கணிப்பு படி இவர்கள் போர்த் தளபதிகளாக இருந்த வேளாளரும் மறவரும்
பெண்கொடுத்து பெண் எடுத்ததால் உருவாகியிருக்ககூடும்.
 வடுகர் ஆட்சியில் தமிழ் அரசர்கள் சார்பாக போரிட்டு தோல்வியடைந்ததால்
அல்லது வடுகர்களுக்கு தளபதியாக இருப்பது பிடிக்காததால் போர்த்தொழிலைக்
கைவிட்டு காய்கறி விவசாயத்தை கைக்கொண்டிருக்க வேண்டும்.

துரை. இராஜகுமரன்
மூவேந்த வேளான் ( நிர்வாக அதிகாரி) போல சேனை வேளான் என்பது முந்தைய படைப்
பெயராக இருக்குமோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக